Author: ஜெயகாந்தன்

கேப்பாளே, கேப்பாளே! அதுக்குத்தானே இருக்கா - மனுஷா, பொல்லாத மனுஷா!

இந்தப் புலி என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. என்கிட்டே அன்பு காட்டறது; எனக்கு ஆதரவா இருக்கு; ஆனாலும் இது புலி! நானும் சிரிக்கிறேன். பதிலுக்கு நன்றி காட்டறேன். ஆனால் பாதுகாத்துக்கவும் வேணும்.

அவ அவ புத்திதான் அவ அவளுக்கு உதவி செய்யணும்.

கண்ணீர் - அதுதான் மனசின் அசுத்தம்பட்ட தண்ணீர்.

உன்னை முடிஞ்சவரைக்கும் மறைச்சு வச்சுக்கோ. இல்லேன்னா உன் அம்மா, அண்ணா, மாமா எல்லாரையும் போல உலகமே உன்னை இளப்பமா நெனைக்கும்.

சீ! பேசாம இருக்கிற என் நாக்கு பேச ஆரம்பிச்சால் என்னென்ன பேசிடறது!

இவர் எனக்காக நடிக்கறார். நான் இவருக்காக நடிக்கறேன்.

‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’னு